ஹதீஸ்கள்
#4709
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அபூஹுரைரா (ரலி) அவர்கள், கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், “உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، حدثنا عبد الله، اخبرنا يونس، ح وحدثنا احمد بن صالح، حدثنا عنبسة، حدثنا يونس، عن ابن شهاب، قال ابن المسيب قال ابو هريرة اتي رسول الله صلى الله عليه وسلم ليلة اسري به بايلياء بقدحين من خمر ولبن، فنظر اليهما فاخذ اللبن قال جبريل الحمد لله الذي هداك للفطرة، لو اخذت الخمر غوت امتك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4709
- Book Index
- 231
Grades
- -
