ஹதீஸ்கள்
#4691
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(அவரைப் பற்றிப்) பேசப்பட்டுவரும் பேச்சின் காரணத்தால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!” என்று கூறினார்கள். நான், “ஆம்! (அப்படித்தான்)” என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப் (அலை) அவர்களும் அவர்களுடைய பிள்ளை களும் ஆவர். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவி கோர வேண்டும்” (12:18) என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا ابو عوانة، عن حصين، عن ابي وايل، قال حدثني مسروق بن الاجدع، قال حدثتني ام رومان، وهى ام عايشة قالت بينا انا وعايشة اخذتها الحمى، فقال النبي صلى الله عليه وسلم " لعل في حديث تحدث ". قالت نعم وقعدت عايشة قالت مثلي ومثلكم كيعقوب وبنيه والله المستعان على ما تصفون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4691
- Book Index
- 213
Grades
- -
