ஹதீஸ்கள்
#4690
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிட மிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு” என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்” (12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “இந்த அவதூறைப் புனைந்து கொண்டுவந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்...” என்று (தொடங்கும் 24:11 முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4690
- Book Index
- 212
Grades
- -