ஹதீஸ்கள்
#4683
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங் களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்ப தற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்” எனும் (11:5ஆவது) இறைவசனத்தை (பிரபல ஓதல் முறையின் படி) “அலா இன்னஹும் யஸ்னூன ஸுதூரஹும்' என்றே ஓதினார்கள். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களல்லாத மற்றச் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஸ்தஃக்ஷூன' எனும் சொல்லுக்கு, “அவர்கள் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்” என்று பொருள். (11:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சீஅ பிஹிம்' என்பதற்கு “லூத் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரைக் குறித்த நல்லெண்ணத்தை இழந்தார்கள்' என்று பொருள். “ளாக்க பிஹிம்' என்பதற்கு “தம் விருந்தினர்களைக் குறித்து (அவர்களைத் தீய செயலுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தம் சமுதாயத்தார் முயல்வார்களோ எனும்) சங்கடம் லூத் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது” என்று பொருள். (11:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பிகித்இம் மினல் லைல்' என்பதற்கு “இரவின் இருட்டு இருக்கும்போதே' என்பது பொருள். (11:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இலைஹி உனீப்' எனும் வாக்கியத்திற்கு “அவன் பக்கமே நான் திரும்புகிறேன்' என்பது பொருள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا عمرو، قال قرا ابن عباس {الا انهم يثنون صدورهم ليستخفوا منه الا حين يستغشون ثيابهم} وقال غيره عن ابن عباس {يستغشون} يغطون رءوسهم {سيء بهم} ساء ظنه بقومه. {وضاق بهم} باضيافه {بقطع من الليل} بسواد. وقال مجاهد {انيب} ارجع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4683
- Book Index
- 205
Grades
- -
