ஹதீஸ்கள்
#4681
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த (11:5ஆவது) வசனத்தை (வேறோர் ஓதல் முறையின்படி), “அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்” என ஓத நான் கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள், “மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்துவிடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து)கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا الحسن بن محمد بن صباح، حدثنا حجاج، قال قال ابن جريج اخبرني محمد بن عباد بن جعفر، انه سمع ابن عباس، يقرا {الا انهم تثنوني صدورهم} قال سالته عنها فقال اناس كانوا يستحيون ان يتخلوا فيفضوا الى السماء، وان يجامعوا نساءهم فيفضوا الى السماء، فنزل ذلك فيهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4681
- Book Index
- 203
Grades
- -
