ஹதீஸ்கள்
#4676
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (இறுதி நாட்களில்) கண்பார்வை அற்றவராக இருந்தபோது அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்னாருடைய புதல்வரான (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் தாம் கலந்து கொள்ளாததைப் பற்றிய) தமது செய்தியை விவரித்தபோது, “எவரது விவகாரத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அவர்களது குற்றத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டான்” என்று தொடங்கும் (9:118ஆவது) இறைவசனம் குறித்துச் சொன்னவற்றை நான் செவியுற்றேன். கஅப் (ரலி) அவர்கள் தமது பேச்சின் இறுதியில் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான (எனது) உரிமையை விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று சொன்னார்கள்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن صالح، قال حدثني ابن وهب، قال اخبرني يونس، قال احمد حدثنا عنبسة، حدثنا يونس، عن ابن شهاب، قال اخبرني عبد الرحمن بن كعب، قال اخبرني عبد الله بن كعب وكان قايد كعب من بنيه حين عمي قال سمعت كعب بن مالك، في حديثه {وعلى الثلاثة الذين خلفوا} قال في اخر حديثه ان من توبتي ان انخلع من مالي صدقة الى الله ورسوله. فقال النبي صلى الله عليه وسلم " امسك بعض مالك، فهو خير لك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4676
- Book Index
- 198
Grades
- -
