ஹதீஸ்கள்
#4675
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அபூதாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூதாóபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “(என் தந்தையின் சகோதரரே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தான் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும்- அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும்கூட- அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” எனும் (9:113 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.21 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4675
- Book Index
- 197
Grades
- -