ஹதீஸ்கள்
#4672
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்டபோது அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அவரிடம் கொடுத்து அப்துல்லாஹ் பின் உபையை அதில் கஃபனிடும்படி உத்தர விட்டார்கள். பிறகு அவருக்கு ஜனாஸா தொழுவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “நயவஞ்சகராயிருந்த இவருக்கு நீங்கள் தொழுவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ, இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டாம் என்று உங்களைத் தடுத்துள்ளானே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம் அல்லது கோராமலும் இருக்கலாம் என்று) “எனக்கு அல்லாஹ் நான் விரும்பியதைச் செய்துகொள்ள விருப்ப உரிமை அளித்துள்ளான்' அல்லது “அல்லாஹ் எனக்கு இவ்வாறு அறிவித்துள்ளான்' என்று கூறி, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக. (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவ மன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான்” எனும் (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு, “நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காக அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். பின்னர் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். பிறகு அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் இறுதித்தொழுகை தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீர் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்” எனும் (9:84ஆவது) வசனத்தை நபிகளாருக்கு அருளினான். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4672
- Book Index
- 194
Grades
- -