ஹதீஸ்கள்
#4671
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது அவருக்கு ஜனாஸா தொழு கையை முன்னின்று நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்த போது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!” என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்குப் பட்டியóட்டுக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, “எனக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள், உமரே!” என்று சொன்னார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், “இவருக்காகப் பாவமன்னிப்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந் தெடுத்துக்கொண்டேன்.) நான் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப் புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரிய வருமாயின் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் “பராஅத்' (9ஆவது) அத்தியாயத்திலிருந்து, “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் ஜனாஸா தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்” எனும் (9:84, 85 ஆகிய) இரு வசனங்கள் அருளப்பெற்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குமுன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل،. وقال غيره حدثني الليث، حدثني عقيل، عن ابن شهاب، قال اخبرني عبيد الله بن عبد الله، عن ابن عباس، عن عمر بن الخطاب رضى الله عنه انه قال لما مات عبد الله بن ابى ابن سلول دعي له رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت اليه، فقلت يا رسول الله، اتصلي على ابن ابى وقد قال يوم كذا كذا وكذا قال اعدد عليه قوله، فتبسم رسول الله صلى الله عليه وسلم وقال " اخر عني يا عمر ". فلما اكثرت عليه قال " اني خيرت فاخترت، لو اعلم اني ان زدت على السبعين يغفر له لزدت عليها ". قال فصلى عليه رسول الله صلى الله عليه وسلم ثم انصرف فلم يمكث الا يسيرا حتى نزلت الايتان من براءة {ولا تصل على احد منهم مات ابدا} الى قوله {وهم فاسقون} قال فعجبت بعد من جراتي على رسول الله صلى الله عليه وسلم والله ورسوله اعلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4671
- Book Index
- 193
Grades
- -
