ஹதீஸ்கள்
#4668
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலிக்குச் சுமை சுமக்கும் வேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு “ஸாஉ' (பேரீச்சம்பழம்) கொண்டுவந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், “(அரை “ஸாஉ' கொண்டுவந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டுவந்திருக்கிறார்” என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான், “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங் களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.15 அத்தியாயம் :
حدثني بشر بن خالد ابو محمد، اخبرنا محمد بن جعفر، عن شعبة، عن سليمان، عن ابي وايل، عن ابي مسعود، قال لما امرنا بالصدقة كنا نتحامل فجاء ابو عقيل بنصف صاع، وجاء انسان باكثر منه، فقال المنافقون ان الله لغني عن صدقة هذا، وما فعل هذا الاخر الا رياء. فنزلت {الذين يلمزون المطوعين من المومنين في الصدقات والذين لا يجدون الا جهدهم} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4668
- Book Index
- 190
Grades
- -
