ஹதீஸ்கள்
#4667
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், “இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்” என்று சொன்னார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒரு மனிதர், “நீங்கள் நீதியாக நடந்துகொள்ளவில்லை” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவருடைய பரம்பரையில் ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். (வேட்டைக்காரனின் அம்பு வேட்டைப் பிராணியைத் துளைத்துவிட்டு வெகுவிரைவில் வெளியேறுவதைப் போன்று) அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்று கூறினார்கள்.14 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن ابيه، عن ابن ابي نعم، عن ابي سعيد رضى الله عنه قال بعث الى النبي صلى الله عليه وسلم بشىء، فقسمه بين اربعة وقال " اتالفهم ". فقال رجل ما عدلت. فقال " يخرج من ضيضي هذا قوم يمرقون من الدين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4667
- Book Index
- 189
Grades
- -
