ஹதீஸ்கள்
#4634
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்). அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதில் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن عمرو، عن ابي وايل، عن عبد الله رضى الله عنه قال " لا احد اغير من الله، ولذلك حرم الفواحش ما ظهر منها وما بطن، ولا شىء احب اليه المدح من الله، لذلك مدح نفسه ". قلت سمعته من عبد الله قال نعم. قلت ورفعه قال نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4634
- Book Index
- 156
Grades
- -
