ஹதீஸ்கள்
#4609
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மிக்தாத் (ரலி) அவர்கள், பத்ர் போரின்போது, “அல்லாஹ்வின் தூதரே! இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின் றோம்' என்று சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்லமாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம்” என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் சொன்னபோது நான் (அங்கு) இருந்தேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகத் தொடங்குகிறது.7 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4609
- Book Index
- 131
Grades
- -