ஹதீஸ்கள்
#4600
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவருவார். பேரீச்சமரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்ற வ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்து வந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போதுதான், “ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்துகொள்வதே நலம் தரக்கூடியதாகும்” எனும் (4:128ஆவது) வசனம் அருளப்பெற்றது.30 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (4:35ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஷிகாக்' எனும் சொல்லுக்கு “பரஸ்பரப் பிணக்கு' என்பது பொருள். அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها {ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن} الى قوله {وترغبون ان تنكحوهن}. قالت هو الرجل تكون عنده اليتيمة، هو وليها ووارثها، فاشركته في ماله حتى في العذق، فيرغب ان ينكحها، ويكره ان يزوجها رجلا، فيشركه في ماله بما شركته فيعضلها فنزلت هذه الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4600
- Book Index
- 122
Grades
- -
