ஹதீஸ்கள்
#4594
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: “இறைநம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக் கூட்டையும் “பலகையையும்' அல்லது “அகலமான எலும்பையும்' தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் கண் பார்வையற்றவன் ஆயிற்றே!” என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில், “இறைநம்பிக்கையாளர்களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” என்ற இவ்வசனம் (4:95- முழுமையாக) அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء، قال لما نزلت {لا يستوي القاعدون من المومنين} قال النبي صلى الله عليه وسلم " ادعوا فلانا ". فجاءه ومعه الدواة واللوح او الكتف فقال " اكتب لا يستوي القاعدون من المومنين والمجاهدون في سبيل الله ". وخلف النبي صلى الله عليه وسلم ابن ام مكتوم فقال يا رسول الله انا ضرير. فنزلت مكانها {لا يستوي القاعدون من المومنين غير اولي الضرر والمجاهدون في سبيل الله}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4594
- Book Index
- 116
Grades
- -
