ஹதீஸ்கள்
#4560
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூஉவுக்குப் பிறகு “குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்' என்று சொன்ன பின்பு, “இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக!17 இறைவா! முளர் குலத்தாரின்மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத் தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.18 அதைச் சப்தமாகச் சொல்வார்கள். தமது ஃபஜ்ர் தொழுகைகள் சிலவற்றில், “இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக” என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த் திப்பார்கள். அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்துவந்தார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن سعيد بن المسيب، وابي، سلمة بن عبد الرحمن عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان اذا اراد ان يدعو على احد او يدعو لاحد قنت بعد الركوع، فربما قال اذا قال " سمع الله لمن حمده، اللهم ربنا لك الحمد، اللهم انج الوليد بن الوليد، وسلمة بن هشام، وعياش بن ابي ربيعة، اللهم اشدد وطاتك على مضر واجعلها سنين كسني يوسف ". يجهر بذلك وكان يقول في بعض صلاته في صلاة الفجر " اللهم العن فلانا وفلانا ". لاحياء من العرب، حتى انزل الله {ليس لك من الامر شىء} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4560
- Book Index
- 82
Grades
- -
