ஹதீஸ்கள்
#4558
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நபியே! நீர் நினைவு கூர்க!)” எனும் (3:122ஆவது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது. பனூ ஹாரிஸா மற்றும் பனூ சலிமா குலத்தாரான நாங்கள்தான் அந்த இரு பிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) அருளப்பெறாமல் இருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், “அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான்” என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கின்றான். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கும்போது, “இது அருளப்பெறாமல் இருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது” என்று சொன்னார்கள்.15 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال قال عمرو سمعت جابر بن عبد الله رضى الله عنهما يقول فينا نزلت {اذ همت طايفتان منكم ان تفشلا والله وليهما} قال نحن الطايفتان بنو حارثة وبنو سلمة، وما نحب وقال سفيان مرة وما يسرني انها لم تنزل لقول الله {والله وليهما}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4558
- Book Index
- 80
Grades
- -
