ஹதீஸ்கள்
#4554
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளி லேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்கு எதிரேயிருந்த “பீருஹா' (அல்லது “பைருஹா') எனும் தோட்டம் தம் சொத்துகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் தோட்டத்திற் குச் சென்று அதிலுள்ள நல்ல (சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள். “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடைய மாட்டீர்கள்” எனும் (3:92ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! “நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' என அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளில் எனக்கு மிகவும் விருப்பமானது “பீருஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நல்லது. அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!” என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட்டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்” என்றார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் யூசுஃப், ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (“அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!' என்பதற்குப் பதிலாக) “அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே' என்று (நபிகளார் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.11 யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம், “அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே' என்று வாசித்துக்காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4554
- Book Index
- 76
Grades
- -