ஹதீஸ்கள்
#4530
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் வல்லமை மிக்கவனும் விவேகமிக்கவனும் ஆவான்” எனும் (2:240ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறைவசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை “ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது “இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.64 அத்தியாயம் :
حدثني امية بن بسطام، حدثنا يزيد بن زريع، عن حبيب، عن ابن ابي مليكة، قال ابن الزبير قلت لعثمان بن عفان {والذين يتوفون منكم ويذرون ازواجا} قال قد نسختها الاية الاخرى فلم تكتبها او تدعها قال يا ابن اخي، لا اغير شييا منه من مكانه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4530
- Book Index
- 53
Grades
- -
