ஹதீஸ்கள்
#4529
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்குச் சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண்கேட்டு வந்தனர். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் மணவிலக்குச் செய்து “இத்தா' காலம் கழியும்வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் (அவருடைய கணவருக்கே) மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள். அப்போதுதான், “அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்” எனும் (2:232ஆவது) வசனம் அருளப்பெற்றது.63 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4529
- Book Index
- 52
Grades
- -