ஹதீஸ்கள்
#4520
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் “கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்' எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபியர் அனைவருமே அரஃபாத் தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான், “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” எனும் (2:199ஆவது) இறைவசனமாகும்.56 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا محمد بن خازم، حدثنا هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها كانت قريش ومن دان دينها يقفون بالمزدلفة، وكانوا يسمون الحمس، وكان ساير العرب يقفون بعرفات، فلما جاء الاسلام امر الله نبيه صلى الله عليه وسلم ان ياتي عرفات، ثم يقف بها ثم يفيض منها، فذلك قوله تعالى {ثم افيضوا من حيث افاض الناس}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4520
- Book Index
- 45
Grades
- -
