ஹதீஸ்கள்
#4512
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாயில் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாயில் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின்வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தான் புண்ணிய வான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன்வாயில்கள் வழியே நுழையுங்கள்” எனும் (2:189ஆவது) வசனத்தை அருளினான்.49 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4512
- Book Index
- 39
Grades
- -