ஹதீஸ்கள்
#4509
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த 2:187ஆவது வசனம் அருளப் பெற்றதும்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக்கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப்பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்துகொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று,) “அல்லாஹ்வின் தூதரே! என் தலையணையின் கீழே (இந்த இரு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும் பிரித்தறிய முடியவில்லையே?!)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.47 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن حصين، عن الشعبي، عن عدي، قال اخذ عدي عقالا ابيض وعقالا اسود حتى كان بعض الليل نظر فلم يستبينا، فلما اصبح قال يا رسول الله، جعلت تحت وسادتي. قال " ان وسادك اذا لعريض ان كان الخيط الابيض والاسود تحت وسادتك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4509
- Book Index
- 36
Grades
- -
