ஹதீஸ்கள்
#4503
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்தபோது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, “இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே!” என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், “ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்று சொன்னேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4503
- Book Index
- 30
Grades
- -