ஹதீஸ்கள்
#4481
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophetic Commentary on the Qur'an
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற எதையும் கைவிடமாட்டேன்” என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, “நாம் ஒரு வசனத்தை மாற்றினால், அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்கு நிகரானதையோ கொண்டுவருவோம் என்று கூறியுள்ளான்.18 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4481
- Book Index
- 8
Grades
- -