ஹதீஸ்கள்
#4459
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப்பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இதைச் சொன்னவர் யார்?” என்று கேட்டுவிட்டு, “(நபி (ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டுவரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்துபோனதைக்கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க,) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பு தொடர்பாக) எப்படி அவர்கள் இறுதி விருப்பம் தெரிவித்திருப்பார்கள்?” என்று கேட்டார்கள்.489 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا ازهر، اخبرنا ابن عون، عن ابراهيم، عن الاسود، قال ذكر عند عايشة ان النبي صلى الله عليه وسلم اوصى الى علي، فقالت من قاله لقد رايت النبي صلى الله عليه وسلم واني لمسندته الى صدري، فدعا بالطست فانخنث فمات، فما شعرت، فكيف اوصى الى علي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4459
- Book Index
- 475
Grades
- -
