ஹதீஸ்கள்
#4451
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறை வரும்) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, “(இறைவா சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தமது கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்து விட்டார்கள். பிறகு “அவர்களது கரம் விழுந்துவிட்டது' அல்லது “அ(க்குச்சி யான)து அவர்களின் கரத்திóருந்து விழுந்துவிட்டது'. இவ்விதம் நபி (ஸல்) அவர்களின் எச்சிலையும் எனது எச்சிலையும் (அவர்களது) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்றுசேர்த்தான். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابن ابي مليكة، عن عايشة رضى الله عنها قالت توفي النبي صلى الله عليه وسلم في بيتي وفي يومي، وبين سحري ونحري، وكانت احدانا تعوذه بدعاء اذا مرض، فذهبت اعوذه، فرفع راسه الى السماء وقال " في الرفيق الاعلى في الرفيق الاعلى ". ومر عبد الرحمن بن ابي بكر وفي يده جريدة رطبة، فنظر اليه النبي صلى الله عليه وسلم فظننت ان له بها حاجة فاخذتها، فمضغت راسها ونفضتها فدفعتها اليه، فاستن بها كاحسن ما كان مستنا ثم ناولنيها فسقطت يده او سقطت من يده فجمع الله بين ريقي وريقه في اخر يوم من الدنيا واول يوم من الاخرة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4451
- Book Index
- 471
Grades
- -
