ஹதீஸ்கள்
#4441
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், எந்த நோயிலிருந்து எழுந்திராமல் போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் அவர்களின் அடக்கத் தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், “தமது அடக்கத் தலம் எங்கே வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்.480 அத்தியாயம் :
حدثنا الصلت بن محمد، حدثنا ابو عوانة، عن هلال الوزان، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم في مرضه الذي لم يقم منه " لعن الله اليهود، اتخذوا قبور انبيايهم مساجد ". قالت عايشة لولا ذلك لابرز قبره. خشي ان يتخذ مسجدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4441
- Book Index
- 462
Grades
- -
