ஹதீஸ்கள்
#4421
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அவர்களின் தேவை முடிந்ததும் நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக எழுந்தேன். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். தம் முழங்கைகள் இரண்டையும் அவர்கள் கழுவப்போனபோது அவர்களது (மேலங்கியின்) சட்டைக் கைகள் இரண்டும் (இறுக்கமாக) நெருக்கலாயின. அவர்கள் மேலங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் காலுறைகளின் மீது ஈரக்கையால் தொட்டு “மஸ்ஹ்' செய்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இது தபூக் போரின்போது நடைபெற்ற நிகழ்ச்சி என்றே (என் தந்தை) முஃகீரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என அறிகிறேன். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، عن الليث، عن عبد العزيز بن ابي سلمة، عن سعد بن ابراهيم، عن نافع بن جبير، عن عروة بن المغيرة، عن ابيه المغيرة بن شعبة، قال ذهب النبي صلى الله عليه وسلم لبعض حاجته، فقمت اسكب عليه الماء لا اعلمه الا قال في غزوة تبوك فغسل وجهه، وذهب يغسل ذراعيه فضاق عليه كم الجبة، فاخرجهما من تحت جبته فغسلهما ثم مسح على خفيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4421
- Book Index
- 443
Grades
- -
