ஹதீஸ்கள்
#4419
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “அல்ஹிஜ்ர்' பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, “தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் நுழையும்போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுதுகொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு, தமது தலையை (தமது மேலங்கியால்) மறைத்துக்கொண்டு அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும்வரை வேகவேகமாகப் பயணித்தார்கள்.462 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد الجعفي، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر رضى الله عنهما قال لما مر النبي صلى الله عليه وسلم بالحجر قال " لا تدخلوا مساكن الذين ظلموا انفسهم، ان يصيبكم ما اصابهم الا ان تكونوا باكين ". ثم قنع راسه واسرع السير حتى اجاز الوادي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4419
- Book Index
- 441
Grades
- -
