ஹதீஸ்கள்
#4409
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் சமயம் (நான் மக்காவிலிருந்த போது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! பொருளாதார வசதியுள்ள எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித்துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தர்மம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்' என்று சொன்னார்கள். நான், “அப்படியானால் என் சொத்தில் பாதியைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்க அதற்கும், “வேண்டாம்' என்று சொன்னார்கள். நான், “மூன்றில் ஒரு பங்கைத் தர்மம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், “மூன்றில் ஒரு பங்கா? மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடிச் செய்கின்ற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவுக்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவுக்கும்கூட (உங்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படும்)” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்.) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்” எனக் கூறிவிட்டு உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மையடைவதற்காவும் மற்றச் சிலர் துன்பமடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம்” என்று கூறினார்கள். மேலும், “இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்தைய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே” எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக, “பாவம், சஅத் பின் கவ்லா! (அவர் நினைத்தது நடக்கவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.446 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابراهيم هو ابن سعد حدثنا ابن شهاب، عن عامر بن سعد، عن ابيه، قال عادني النبي صلى الله عليه وسلم في حجة الوداع من وجع، اشفيت منه على الموت، فقلت يا رسول الله بلغ بي من الوجع ما ترى، وانا ذو مال ولا يرثني الا ابنة لي واحدة افاتصدق بثلثى مالي قال " لا ". قلت افاتصدق بشطره قال " لا ". قلت فالثلث قال " والثلث كثير، انك ان تذر ورثتك اغنياء خير من ان تذرهم عالة يتكففون الناس، ولست تنفق نفقة تبتغي بها وجه الله الا اجرت بها، حتى اللقمة تجعلها في في امراتك ". قلت يا رسول الله ااخلف بعد اصحابي قال " انك لن تخلف فتعمل عملا تبتغي به وجه الله الا ازددت به درجة ورفعة، ولعلك تخلف حتى ينتفع بك اقوام ويضر بك اخرون، اللهم امض لاصحابي هجرتهم، ولا تردهم على اعقابهم. لكن البايس سعد ابن خولة رثى له رسول الله صلى الله عليه وسلم ان توفي بمكة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4409
- Book Index
- 431
Grades
- -
