ஹதீஸ்கள்
#4407
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் சிலர், (ஒரு குறிப்பிட்ட இறை வசனம் பற்றி), “இந்த வசனம் (யூதர்களான) எங்களிடையே அருளப்பட்டிருந்தால் நாங்கள் (இது அருளப்பெற்ற) அந்த நாளை (கொண்டாடப்பட வேண்டிய) பெருநாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், “எந்த வசனம் அது?” என்று கேட்க அவர்கள், “ இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன்; உங்கள்மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்துவிட்டேன்; உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துக்கொண்டேன்' எனும் (5:3) இறைவசனம்தான் அது” என்று பதிலளித் தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இது எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பது எனக்குத் தெரியும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“ஹஜ்—த்துல் வதா'வின் சமயத்தில்) அரஃபாவில் நின்றுகொண்டிருந்தபோது அருளப் பெற்றது” என்று சொன்னார்கள்.444 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان الثوري، عن قيس بن مسلم، عن طارق بن شهاب، ان اناسا، من اليهود قالوا لو نزلت هذه الاية فينا لاتخذنا ذلك اليوم عيدا. فقال عمر اية اية فقالوا {اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي}. فقال عمر اني لاعلم اى مكان انزلت، انزلت ورسول الله صلى الله عليه وسلم واقف بعرفة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4407
- Book Index
- 429
Grades
- -
