ஹதீஸ்கள்
#4397
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் “பத்ஹா'வில் இருந்தபோது நான் சென்றேன். அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அவர்கள், “எதற் காக இஹ்ராம் கட்டினீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக் காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே (சயீ) ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிóருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள்.435 அத்தியாயம் :
حدثني بيان، حدثنا النضر، اخبرنا شعبة، عن قيس، قال سمعت طارقا، عن ابي موسى الاشعري رضى الله عنه قال قدمت على النبي صلى الله عليه وسلم بالبطحاء فقال " احججت ". قلت نعم. قال " كيف اهللت ". قلت لبيك باهلال كاهلال رسول الله صلى الله عليه وسلم. قال " طف بالبيت وبالصفا والمروة ثم حل ". فطفت بالبيت وبالصفا والمروة، واتيت امراة من قيس ففلت راسي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4397
- Book Index
- 420
Grades
- -
