ஹதீஸ்கள்
#4396
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்” என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். நான், “எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “குர்பானி பிராணி களை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது” (22:33) எனும் இறை வசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள், “விடைபெறும் ஹஜ்ஜின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடும்படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக்கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், “இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், “அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதிவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثني عمرو بن علي، حدثنا يحيى بن سعيد، حدثنا ابن جريج، قال حدثني عطاء، عن ابن عباس، اذا طاف بالبيت فقد حل. فقلت من اين قال هذا ابن عباس قال من قول الله تعالى {ثم محلها الى البيت العتيق} ومن امر النبي صلى الله عليه وسلم اصحابه ان يحلوا في حجة الوداع. قلت انما كان ذلك بعد المعرف. قال كان ابن عباس يراه قبل وبعد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4396
- Book Index
- 419
Grades
- -
