ஹதீஸ்கள்
#4386
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டீர்கள்தானே! (இனி ஏதேனும்) எங்களுக்கு வழங்கிடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. அப்போது யமன்வாசிகளில் சிலர் (அஷ்அரீ குலத்தார்) வந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அந்த யமனியர், “ஏற்றுக் கொண்டுவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர்.424 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4386
- Book Index
- 409
Grades
- -