ஹதீஸ்கள்
#4370
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுங்கள். அஸ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அவரிடம் கேளுங்கள். “நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (அன்னையே!) தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே' எனக் கேளுங்கள்” என்று (அம்மூவரும்) கூறினர். மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தாமும் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு (அஸ்ருக்குப்பின்) தொழுபவர் களைத் தடுப்பவர்களாக இருந்தோம் என்று கூறினார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று என்னை அம்மூவரும் அனுப்பிய விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் உம்மு சலமாவிடம் சென்று கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பி வந்து அவர்கள் மூவரிடமும் ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உம்மு சலமா (ரó) அவர்களிடம் சென்று கேட்குமாறு அவர்கள் மூவரும் மீண்டும் என்னை அனுப்பினார்கள். (அவ்வாறே அவர்களிடம் வந்து நான் விஷயத்தைக் கேட்டபோது) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தொழ வேண்டாமெனத் தடை செய்ததை நான் கேட்டிருக்கிறேன். பிறகு (ஒருமுறை) அஸ்ர் தொழுதுவிட்டு அவர்கள் எனது அறைக்கு வந்து, அந்த இரு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் “பனூ ஹராம்' குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி, “நீ அவர்களுக்கு அருகில் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நீங்கள் தடை செய்ததை நான் கேட்டிருக்கவில்லையா? ஆனால், தாங்களே இப்போது அதைத் தொழப் பார்க்கின்றேனே?' என நான் கேட்டதாக அவர்களிடம் நீ சொல். அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு” எனக் கூறினேன். அப்பெண்ணும் சொன்னபடி செய்தார். நபி (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தபோது அப்பெண் திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், “அபூஉமய்யாவின் மகளே! (உம்மு சலமாவே!) அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையினரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியைத் தெரிவிக்க என்னிடம் வந்திருந்ததால், லுஹ்ருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்களை என்னால் தொழ முடிய வில்லை; அத்தொழுகையே (இப்போது நான் தொழுத) இந்த இரண்டு ரக்அத் களாகும்' என்றார்கள்.404 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثني ابن وهب، اخبرني عمرو،. وقال بكر بن مضر عن عمرو بن الحارث، عن بكير، ان كريبا، مولى ابن عباس حدثه ان ابن عباس وعبد الرحمن بن ازهر والمسور بن مخرمة ارسلوا الى عايشة رضى الله عنها فقالوا اقرا عليها السلام منا جميعا، وسلها عن الركعتين بعد العصر، وانا اخبرنا انك تصليها، وقد بلغنا ان النبي صلى الله عليه وسلم نهى عنها، قال ابن عباس وكنت اضرب مع عمر الناس عنهما. قال كريب فدخلت عليها، وبلغتها ما ارسلوني، فقالت سل ام سلمة. فاخبرتهم، فردوني الى ام سلمة بمثل ما ارسلوني الى عايشة، فقالت ام سلمة سمعت النبي صلى الله عليه وسلم ينهى عنهما، وانه صلى العصر ثم دخل على وعندي نسوة من بني حرام من الانصار، فصلاهما، فارسلت اليه الخادم فقلت قومي الى جنبه فقولي تقول ام سلمة يا رسول الله الم اسمعك تنهى عن هاتين الركعتين فاراك تصليهما. فان اشار بيده فاستاخري. ففعلت الجارية، فاشار بيده، فاستاخرت عنه، فلما انصرف قال " يا بنت ابي امية، سالت عن الركعتين بعد العصر، انه اتاني اناس من عبد القيس بالاسلام من قومهم، فشغلوني عن الركعتين اللتين بعد الظهر، فهما هاتان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4370
- Book Index
- 396
Grades
- -
