ஹதீஸ்கள்
#4369
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் “ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்க விடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். ஆகவே, எங்களுக்குச் சில விஷயங்களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன். (கட்டளையிடும் நான்கு விஷயங் களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறுவது - இவ்வாறு சொல்லி “ஒன்று' என (தமது விரலால்) எண்ணினார்கள் - தொழுகையைக் கடைபிடிப்பது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்துவது (ஆகியவைதான் அவை.) (மதுபானம் ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்.403 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4369
- Book Index
- 395
Grades
- -