ஹதீஸ்கள்
#4366
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங் கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். அவையாவன: 1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க்கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளில் ஒருத்தியாவாள்” என்று சொன்னார்கள். 3. (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவை “ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது “என் சமுதாயத்தின்' தானப் பொருட்கள்” என்று சொன்னார்கள்.400 அத்தியாயம் :
حدثني زهير بن حرب، حدثنا جرير، عن عمارة بن القعقاع، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال لا ازال احب بني تميم بعد ثلاث سمعته من رسول الله صلى الله عليه وسلم يقولها فيهم " هم اشد امتي على الدجال ". وكانت فيهم سبية عند عايشة فقال " اعتقيها فانها من ولد اسماعيل ". وجاءت صدقاتهم فقال " هذه صدقات قوم، او قومي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4366
- Book Index
- 392
Grades
- -
