ஹதீஸ்கள்
#4358
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா' என்று பதிலளித்தார்கள். நான், “ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)' என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “உமர்' என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் பட்டியலிட்டு (அவர்களெல்லாரும் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்குப் பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கிவிடுவார்களோ' என்று அஞ்சியதால் நான் மௌனமாயிருந்துவிட்டேன்.389 அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا خالد بن عبد الله، عن خالد الحذاء، عن ابي عثمان، ان رسول الله صلى الله عليه وسلم بعث عمرو بن العاص على جيش ذات السلاسل قال فاتيته فقلت اى الناس احب اليك قال " عايشة ". قلت من الرجال قال " ابوها ". قلت ثم من قال " عمر ". فعد رجالا فسكت مخافة ان يجعلني في اخرهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4358
- Book Index
- 384
Grades
- -
