ஹதீஸ்கள்
#4349
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீயே! காலிதின் சகாக்களில் “உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வர விரும்புபவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்சிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந் தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் “ஊகியா'க்களை நான் பெற்றேன். அத்தியாயம் :
حدثني احمد بن عثمان، حدثنا شريح بن مسلمة، حدثنا ابراهيم بن يوسف بن اسحاق بن ابي اسحاق، حدثني ابي، عن ابي اسحاق، سمعت البراء رضى الله عنه . بعثنا رسول الله صلى الله عليه وسلم مع خالد بن الوليد الى اليمن، قال ثم بعث عليا بعد ذلك مكانه فقال مر اصحاب خالد، من شاء منهم ان يعقب معك فليعقب، ومن شاء فليقبل. فكنت فيمن عقب معه، قال فغنمت اواق ذوات عدد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4349
- Book Index
- 376
Grades
- -
