ஹதீஸ்கள்
#4348
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) வந்தபோது மக்களுக்கு சுப்ஹ் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது, “அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” எனும் (4:125ஆம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.381 மற்றோர் அறிவிப்பில் கூடுதாக உள்ள தாவது: நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) அனுப்பினார்கள். (அங்கு சென்றபின்) முஆத் (ரலி) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் (இமாமாக நின்று குர்ஆனின் நான்காவது அத்தியாயமான) “அந்நிசா' அத்தியாயத்தை ஓதினார்கள். “அல்லாஹ் இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” (4:125) எனும் வசனத்தை முஆத் (ரலி) அவர்கள் ஓதியபோது அவர்களுக்குப் பின்னாóருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن حبيب بن ابي ثابت، عن سعيد بن جبير، عن عمرو بن ميمون، ان معاذا رضى الله عنه لما قدم اليمن صلى بهم الصبح فقرا {واتخذ الله ابراهيم خليلا} فقال رجل من القوم لقد قرت عين ام ابراهيم. زاد معاذ عن شعبة عن حبيب عن سعيد عن عمرو ان النبي صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن، فقرا معاذ في صلاة الصبح سورة النساء فلما قال {واتخذ الله ابراهيم خليلا} قال رجل خلفه قرت عين ام ابراهيم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4348
- Book Index
- 375
Grades
- -
