ஹதீஸ்கள்
#4333
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தார் (நபி (ஸல்) அவர்களைப்) போர்க் களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (அறப்போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின்போது) பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர்.367 அப்போது (ஹவாஸின் குலத்தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்ற னர். நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?)” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அழைப்புக்குப் பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கின்றோம்” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய துதருமாவேன்” என்று சொன்னார்கள். (பிறகு அந்தப் போரில்) இணைவைப்பாளர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, “இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4333
- Book Index
- 362
Grades
- -