ஹதீஸ்கள்
#4322
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது முஸ்லிம்களில் ஒருவர் இணைவைப்பாளர்களில் ஒருவரோடு போரிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன். இணைவைப்பாளர்களில் இன்னொருவர் அந்த முஸ்óமைக் கொல் வதற்காக அவருக்குப் பின்னாலிருந்து ஒளிந்து ஒளிந்து வந்துகொண்டிருப்பதையும் கண்டேன். ஒளிந்தபடி அவரைத் தாக்க வந்தவரை நோக்கி (அவரைத் தடுப்பதற்காக) நான் விரைந்தோட, அவர் என்னைத் தாக்குவதற்காகத் தமது கையை ஓங்கினார். நான் அவரது கையில் தாக்கி அதைத் துண்டித்துவிட்டேன். பிறகு அவர் என்னைப் பிடித்துக்கொண்டு, நான் (என் உயிர் பிரிந்துவிடுமோ என்று) அஞ்சும் அளவுக்குக் கடுமையாக என்னைக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டுப் பிடி தளர்ந்தார். பிறகு நான் அவரை(க் கீழே) தள்ளிக் கொன்றுவிட்டேன். (ஆனால்,) முஸ்óம்கள் தோற்றுவிட்டனர். நானும் அவர்களுடன் தோற்றுப்போனேன். நான் அப்போது (தோற்ற) மக்களி டையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம், “மக்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு” என்று சொன்னார்கள். பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து (தீரத்துடன் போரிட்டு வென்றார்கள். இறுதியில், தம் போர்ச் செல்வத்தைக் குறித்துக்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் தன்னால் கொல்லப்பட்ட (எதிரி) ஒருவரை, அவர்தான் கொன்றார் என்பதற்கு ஒரு சான்றைக் கொண்டுவருகிறாரோ அவருக்கே கொல்லப்பட்டவரின் உடóóருந்து எடுக்கப்படும் பொருட்கள் உரியன” என்று சொன்னார்கள். ஆகவே, என்னால் கொல்லப்பட்டவரை நான்தான் கொன்றேன் என்பதற்கு சான்று தேடுவதற்காக நான் எழுந்தேன். ஆனால், எனக்காகச் சாட்சியம் சொல்பவர் யாரையும் நான் காணவில்லை. ஆகவே, உட்கார்ந்துகொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, நான் ஒருவரைக் கொன்றதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கின்ற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடமிருந்து (எனக்கு) இசைவு பெற்றுத்தாருங்கள்” என்று சொன்னார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக் காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் அரிமாக் களில் ஓர் “அரிமா'வை விட்டுவிட்டு குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந்தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்தபின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4322
- Book Index
- 352
Grades
- -