ஹதீஸ்கள்
#4315
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு மனிதர் வந்து, “அபூஉமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் (தோற்றுப்) பின்வாங்கிவிட்டீர் களா?” என்று கேட்டார். நான், “நபி (ஸல்) அவர்கள் தோற்றுப் பின்வாங்கிச் செல்லவில்லை என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். ஆயினும், சமுதாயத்தில் அவசரக்காரர்கள் சிலர் (பதுங்கியிருந்த எதிரிகளைக் கவனிக்காது அவர்களின் போர்ச்செல்வங்களைச் சேகரிப்பதில்) அவசரப்பட்டுவிட்டார்கள். அப்போது (அம்பெய்வதில் வல்லவர்களான) ஹவாஸின் குலத்தார் அவர்கள் மீது (சரமாரியாக) அம்பெய்தார்கள். அப்போது அபூசுஃயான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் தலையைப் பிடித்துக்கொண்டிருக்க, “நான் இறைத்தூதர்தான்;இது பொய்யல்ல.நான் அப்துல் முத்தலிபின்(மகனுடைய) மகன் ஆவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தார்கள்.345 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، حدثنا سفيان، عن ابي اسحاق، قال سمعت البراء، رضى الله عنه وجاءه رجل فقال يا ابا عمارة اتوليت يوم حنين فقال اما انا فاشهد على النبي صلى الله عليه وسلم انه لم يول، ولكن عجل سرعان القوم، فرشقتهم هوازن، وابو سفيان بن الحارث اخذ براس بغلته البيضاء يقول {انا النبي لا كذب، انا ابن عبد المطلب}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4315
- Book Index
- 346
Grades
- -
