ஹதீஸ்கள்
#4313
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்களிடையே) எழுந்து நின்று, “அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தபோதே மக்காவைப் புனிதப்படுத்திவிட்டான். ஆகவே, அது அல்லாஹ் புனிதப்படுத்திய காரணத்தால் இறுதி நாள்வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பிறகும் எவருக்கும் அது அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட (மக்கா வெற்றி கொள்ளப்படும் இத்தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகள் கிள்ளப்படக் கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறவரும் எடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! “இத்கிர்' எனும் புல் நீங்கலாகத்தானே? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகிறது” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, “இத்கிர் நீங்கலாகத்தான்; அ(தை வெட்டிப் பயன்படுத்துவ)து அனுமதிக் கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.343 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4313
- Book Index
- 344
Grades
- -