ஹதீஸ்கள்
#4304
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலப்) பெண் ஒருவர் திருடிவிட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்திவிடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே உசாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்ற எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனதுதகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த (குலத்த)வர் திருடும்போது அவரை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வர் திருடும்போது அவருக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடிவிட்டிருந்தாலும் அவரது கையையும் நான் கண்டிப்பாக வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டார்; மேலும், மணம் புரிந்தும்கொண்டார். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.339 அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرني يونس، عن الزهري، قال اخبرني عروة بن الزبير، ان امراة، سرقت في عهد رسول الله صلى الله عليه وسلم في غزوة الفتح، ففزع قومها الى اسامة بن زيد يستشفعونه، قال عروة فلما كلمه اسامة فيها تلون وجه رسول الله صلى الله عليه وسلم فقال " اتكلمني في حد من حدود الله ". قال اسامة استغفر لي يا رسول الله. فلما كان العشي قام رسول الله صلى الله عليه وسلم خطيبا، فاثنى على الله بما هو اهله ثم قال " اما بعد، فانما اهلك الناس قبلكم انهم كانوا اذا سرق فيهم الشريف تركوه، واذا سرق فيهم الضعيف اقاموا عليه الحد، والذي نفس محمد بيده، لو ان فاطمة بنت محمد سرقت لقطعت يدها ". ثم امر رسول الله صلى الله عليه وسلم بتلك المراة، فقطعت يدها، فحسنت توبتها بعد ذلك وتزوجت. قالت عايشة فكانت تاتي بعد ذلك فارفع حاجتها الى رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4304
- Book Index
- 337
Grades
- -
