ஹதீஸ்கள்
#4295
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அத்வீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள். மக்கா வெற்றிக்கு மறுநாள், நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின் வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர் கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று கூறிவிடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கூறினார்கள். அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், “இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ அபூஷுரைஹே! உம்மை விட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன். நிச்சயமாக, புனித (ஹரம்) எல்லை, குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு, அல்லது கொள்ளை அடித்துவிட்டு ஓடி வந்தவருக்கும் பாதுகாப்பு அளிக்காது என அம்ர் கூறினார்” என்று பதிலளித் தார்கள்.334 (இங்கு “கொள்ளை' என்பதைக் குறிக்க) “கர்பத்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' என்பது (சொற்) பொருளாகும். அத்தியாயம் :
حدثنا سعيد بن شرحبيل، حدثنا الليث، عن المقبري، عن ابي شريح العدوي، انه قال لعمرو بن سعيد وهو يبعث البعوث الى مكة ايذن لي ايها الامير احدثك قولا قام به رسول الله صلى الله عليه وسلم الغد يوم الفتح، سمعته اذناى ووعاه قلبي، وابصرته عيناى، حين تكلم به حمد الله واثنى عليه ثم قال " ان مكة حرمها الله ولم يحرمها الناس، لا يحل لامري يومن بالله واليوم الاخر ان يسفك بها دما، ولا يعضد بها شجرا، فان احد ترخص لقتال رسول الله صلى الله عليه وسلم فيها فقولوا له ان الله اذن لرسوله، ولم ياذن لكم. وانما اذن لي فيها ساعة من نهار، وقد عادت حرمتها اليوم كحرمتها بالامس، وليبلغ الشاهد الغايب ". فقيل لابي شريح ماذا قال لك عمرو قال قال انا اعلم بذلك منك يا ابا شريح، ان الحرم لا يعيذ عاصيا، ولا فارا بدم، ولا فارا بخربة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4295
- Book Index
- 328
Grades
- -
