ஹதீஸ்கள்
#4277
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தில் (மக்கா வெற்றிக்குப்பின்) ஹுனைன் நோக்கி (அறப் போருக்காக)ப் புறப்ப(டத் திட்டமி)ட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத் தில் நன்கு அமர்ந்துகொண்டபோது ஒரு “பால் பாத்திரத்தை' அல்லது “தண்ணீர்ப் பாத்திரத்தை' கொண்டுவரும்படி கூறி, அதைத் “தமது உள்ளங்கையில்' அல்லது “தமது வாகனத்தில்' வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். அப்போது நோன்பை விட்டுவிட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், “நீங்களும் நோன்பை விடுங்கள்” என்று சொன்னார் கள். அத்தியாயம் :
حدثني عياش بن الوليد، حدثنا عبد الاعلى، حدثنا خالد، عن عكرمة، عن ابن عباس، قال خرج النبي صلى الله عليه وسلم في رمضان الى حنين، والناس مختلفون فصايم ومفطر، فلما استوى على راحلته دعا باناء من لبن او ماء، فوضعه على راحته او على راحلته، ثم نظر الى الناس فقال المفطرون للصوام افطروا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4277
- Book Index
- 311
Grades
- -
