ஹதீஸ்கள்
#4263
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரில், ஸைத்) இப்னு ஹாரிஸா, ஜஅஃபர் பின் அபீதாலிப் , அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலை கொண்ட முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே!' என்று அழைத்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, “அவர்களை நான் தடுத்தேன். ஆனால், அவர்கள் (எனது சொல்லுக்குக்) கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “(நீ சென்று அவர்களைத் தடுத்து நிறுத்து” என) மீண்டும் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிஞ்சிவிட்டனர்” என்றார். -”அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்- பின்னர் நான் அம்மனிதரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண் கவ்வச் செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக்கூறினேன்.307 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا عبد الوهاب، قال سمعت يحيى بن سعيد، قال اخبرتني عمرة، قالت سمعت عايشة رضى الله عنها تقول لما جاء قتل ابن حارثة وجعفر بن ابي طالب وعبد الله بن رواحة رضى الله عنهم جلس رسول الله صلى الله عليه وسلم يعرف فيه الحزن قالت عايشة وانا اطلع من صاير الباب تعني من شق الباب فاتاه رجل فقال اى رسول الله ان نساء جعفر قال وذكر بكاءهن، فامره ان ينهاهن قال فذهب الرجل ثم اتى فقال قد نهيتهن. وذكر انه لم يطعنه قال فامر ايضا فذهب ثم اتى فقال والله لقد غلبننا. فزعمت ان رسول الله صلى الله عليه وسلم قال " فاحث في افواههن من التراب " قالت عايشة فقلت ارغم الله انفك، فوالله ما انت تفعل، وما تركت رسول الله صلى الله عليه وسلم من العناء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4263
- Book Index
- 297
Grades
- -
