ஹதீஸ்கள்
#4256
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவுக்கு) வந்தபோது, “யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது” என்று இணைவைப்பாளர்கள் பேசிக்கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் “(கஅபாவைச் சுற்றி வருகையில்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்' என்றும் “ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும்' என்றும் கட்டளையிட்டார்கள். “(தவாஃப் வரும்போது) மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம் அவர்கள் மீது கொண்ட இரக்கமேயாகும்.302 “நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புப் பெற்ற ஆண்டில் (உம்ரத்துல் களாவிற்காக) மக்காவிற்கு வந்தபோது (தம் தோழர்களை நோக்கி,) “(கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருகையில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள்; ஏனேனில், உங்கள் பலத்தை இணைவைப்பாளர்களுக்கு நான் காட்ட வேண்டும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. “அப்போது இணைவைப்பாளர்கள், “குஅய்கிஆன்' எனும் மலையின் திசையில் (இருந்து எட்டிப் பார்த்துக்கொண்டு) இருந்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு சலமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4256
- Book Index
- 290
Grades
- -